திருவாரூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

திருவாரூர் மாவட்டம்  நடப்பூர் பகுதியில், கோமாரி நோய்  தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கால்நடைகளை பராமரிப்பது பற்றிய விளக்கமும் அளிக்கப்பட்டது. மார்ச் 15ஆம் தேதி தொடங்கி இம்முகாம் 21 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கோட்டாச்சியர் முருகதாஸ், கால்நடை மருத்துவ அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Exit mobile version