திண்டிவனம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்து!

திண்டிவனம் அருகே சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து நெடுஞ்சாலை நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

உடன்குடியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சொகுசு பேருந்து அதிகாலை திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்தது. இந்நிலையில் சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டை மீது மோதி நெடுஞ்சாலையில் கவிழந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை மீட்ட காவல்துறையினர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிக்கிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Exit mobile version