கோவையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் கொள்ளை : 3 பேர் கைது

கோவை கவுண்டம்பாளையம் அருகே கட்டிட காண்டிராக்டர் வீட்டில் புகுந்து கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள சுப்பிரமணியம்பாளையம் என்.பி.சி நகரில் வசித்து வரும் கட்டிட கான்டிராக்டர் கார்த்திக்கின் வீட்டின் கதவை உடைத்து பட்டப்பகலில் மர்ம நபர்கள் நுழைந்தனர். வேலைக்கார மூதாட்டியை தாக்கி விட்டு வீட்டில் இருந்த 33 சவரன் நகைகள், 20 ஆயிரம் ரூபாயை அவர்கள் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து உரிமையாளர் கார்த்திக், துடியலூர் காவல்நிலைய போலீசில் புகார் அளித்தார். உடடினயாக விரைந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளை தேடினர். இதைத்தொடர்ந்து இடையார்பாளையம் பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட கொள்ளையர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 91 சவரன் நகைகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version