டெல்லியில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ; 3 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் வட மாநிலங்களில் அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

டெல்லியில் அடுத்த 6 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க தொங்கியுள்ளனர்.

அரசு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில் டெல்லியில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் நூற்றுக்காணக்கான தொழிலாளர்கள் முண்டியடித்து சென்றுள்ளனர்.

அந்த பேருந்து மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் ஜோராசி என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்த போது வளைவு ஒன்றில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றேதே பேருந்து விபத்துக்குள்ளானதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Exit mobile version