வீட்டின் பூட்டை உடைத்து, நகை திருடிய வழக்கில் மூவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து, நகை திருடிய வழக்கில் கொள்ளையர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குன்றத்தூரை அடுத்த பெசில் கார்டன் பகுதியை சேர்ந்த கிருஷ்ணய்யா. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இரவில் வீட்டை பூட்டிவிட்டு மாடியில் உள்ள அறையில் குடும்பத்தோடு உறங்கியுள்ளார். இந்நிலையில், மர்மநபர்கள் அறையின் வெளியே தாழிட்டு பூட்டிவிட்டு, வீட்டில் இருந்த நகைகள், எல்இடி டிவி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திய காவல் துறையினர், ஓட்டேரியைச் சேர்ந்த முருகன், செல்வம், பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் பகல் நேரங்களில் ஆட்டோ ஓட்டியும், இரவு நேரங்களில் கொள்ளையில் ஈடுபட்டும் வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 7 பவுன் நகை, எல்இடி டிவி, ஆட்டோ ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version