மேட்டூர் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

மேட்டூரில் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்தேக்கப் பகுதியில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத பெண் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர் கொளத்தூர் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என்பது தெரிய வந்தது.

20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி விவகாரத்து பெற்ற இவர், தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன், மாதப்பன், சுப்ரமணி ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Exit mobile version