திருவாரூர் தொகுதிக்கு பிப்.7க்குள் தேர்தல் நடத்தப்படும் – தேர்தல் ஆணையம்

அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதிக்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதி உயிரிழந்ததால் திருவாரூர் தொகுதி காலியானது. இதேபோல் ஏ.கே. போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதி காலியானது. இதையடுத்து, திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் நடத்தவேண்டும் என்று கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதிக்குள் திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதுகுறித்து தற்போது முடிவெடுக்க முடியாது என்றும், தீர்ப்பு வந்தபின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாஹூ பதிலளித்துள்ளார்.

 

Exit mobile version