திருவாரூர் இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வில் விருப்ப மனுக்கள் இன்று முதல் பெறப்படுகிறது

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று காலை முதல் அ.தி.மு.க.வினரிடம் விருப்ப மனு பெறப்படுகிறது.

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வேட்பு மனுத்தாக்கல், நாளை தொடங்குகிறது. வரும் 10-ம் தேதி வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் இன்று காலை முதல் விருப்ப மனு அளிக்க உள்ளனர். திருவாரூர் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் காலை 9.30 மணி முதல், நாளை மாலைக்குள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பக் கட்டணத் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்னப்ப படிவங்களை, நாளை மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை 4-ம் தேதி மாலை நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமைக்கழகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version