திருட வந்த இடத்தில் ஜாலியாக ஊஞ்சலாடிய திருடன்

விழுப்புரத்தில் திருட வந்த இடத்தில் அயர்ந்து சிறிது நேரம் ஊஞ்சலாடி விட்டு சென்ற திருடனின் சிசிடிவி கேமராவில் சிக்கிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் சுதாகர் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆசிரியர் இளங்கோ. இவர் கடந்த ஓர் ஆண்டுகளாக தொடர்ந்து தங்கள் பகுதிகளில் திருட்டு நடந்து வந்ததால், தனது வீட்டை சுற்றி 6 இடங்களில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். இந்நிலையில், நேற்று தனது வீட்டின் அருகில், இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டு இருந்ததை கண்ட இளங்கோ, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.

அப்போது, இளைஞர் ஒருவர், இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் மற்றும் உதிரிபாகங்களை திருடிவிட்டு வீட்டின் மாடி பகுதிக்குச் சென்று ஊஞ்சல் ஒன்றில் சிறிது நேரம் உட்கார்ந்து இளைப்பாறிவிட்டு சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version