சென்ற ஆண்டைவிட இந்தாண்டு அதிகமான மாணவர் சேர்க்கை இருக்கும்

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருக்கும் என உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2019ம் ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை ஆன்லைன் மூலம் கடந்த மே இரண்டாம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இணையதளம் மூலமாக ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் கடந்த மூன்றாம் தேதி வெளியிடப்பட்டது. இந்தநிலையில், தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாணவர்களின் பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியை துவங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டை விட இந்தாண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் என தெரிவித்தார்.

Exit mobile version