மாணவர்களின் இடுப்பளவை கணக்கிட வேண்டும்! என்னவா இருக்கும்?

அரசுப் பள்ளி மாணவர்களின் கண் பார்வை, மூக்கு மற்றும் இடுப்பளவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய சுகாதார இயக்ககம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்த இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளை இளம் வயதிலே கண்டறியும் பொருட்டு நடவடிக்கை எடுப்பதற்கான விஷயமாக இது பார்க்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக இது குறித்து சுற்றறிக்கையானது அனைத்து பள்ளிகளிலும் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறூம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல் நலன் சார்ந்த அளவீடுகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் மாணவர்களுக்கு அருகில் அல்லது தொலைவில் உள்ள பொருட்களை பார்ப்பதில் குறைபாடு உள்ளாதா இல்லையா என்பதையும், கண் சிவந்துள்ளதா, புத்தக வாசிப்பில் வரிகளை தவற விடுகின்றனரா மற்றும் மாறு கண் குறைபாடு உள்ளதா என்பதையும் பள்ளிகள் கவனிக்க வேண்டும்.

இதைத் தவிர மாணவர்களின் இடுப்பு நீளத்தை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் உயரம், எடையையும் குறிப்பிட வேண்டும். மாணவர்களின் தோள்பட்டை, கால் உயரத்தையும் கணக்கிட வேண்டும். தலை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருந்தாலும் அல்லது முகத்தில் அசாதாரண மாறுதல்கள் உள்ளனவா மற்றூம் மூக்கு சப்பையாகவோ வளைந்தோ உள்ளதா மற்றும் பற்களில் பழுப்பு நிறக் கறை உள்ளதா, பாதங்கள் வளைந்துள்ளதா என 42 வகை குறைபாடுகள் குறித்து ஆய்வு நடத்தி அவற்றை செயலியில் பதிய வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் மாணவர்களுக்கு சுகாதாரமான வாழ்வாதாரத்தையும், செம்மைமிகு உடல்நலப் பேணலையும் வகுத்துக் கொடுக்க முடியும்.

Exit mobile version