GATE தேர்வு பிப்ரவரி 3 ஆம் தேதி துவக்கம்!

”கேட்” தேர்வானது பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி தொடங்குகிறது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு நடைபெறூம் நாட்களில் வேறு எந்தவகையான தேர்வுகளும் நடைபெறதா வண்ணம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

பொறியியல் படிப்பை முடிக்கும் பட்டதாரி மாணவ, மாணவிகளுக்காக தேசிய அளவில் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது. அதேபொல அடுத்த ஆண்டான 2024 ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு குறித்த அறிவிப்பை பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) தற்போது வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2024ல் நடைபெறும் கேட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 3,4, 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

பெரும்பாலும் கணினி வாயிலாகத்தான் இந்த தேர்வு நடைபெறும். இத்தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாள் காலையிலும் பிற்பகலிலும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஐஐஎஸ்சி, 7 ஐஐடி-க்களுடன் இணைந்து நடத்த உள்ளது. தேர்வு முடிவானது மார்ச் 16 2024-ல் வெளியிடப்பட்டு மார்ச் 23 2024 முதல் மார்ச் 31 2024 வரை பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட இருக்கிறது.

Exit mobile version