தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கொடிவேரி அணை பகுதியில், 2 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் அமைத்தல், பூங்கா உள்ளிட்ட பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ் 1, பிளஸ் 2 மறுதேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து, முதலமைச்சர் அறிவிப்பார் என கூறினார். தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும், பெற்றோரிடம் ஆலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் குறித்த விளம்பர பதாகைகள் வைக்கும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்தார்.

Exit mobile version