News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை – உயர்நீதிமன்றம்

Web Team by Web Team
September 18, 2020
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை – உயர்நீதிமன்றம்
Share on FacebookShare on Twitter

நீதிமன்றத்தை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

 நீட் தேர்வு அச்சத்தால் சமீபத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் சூர்யா, ‘ உயிருக்கு பயந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிடுகிறது’ என விமர்சித்திருந்தார்.

 இதைத்தொடர்ந்து, நீதிமன்றங்களை தவறாக விமர்சித்ததாக நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 13 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பிய கடிதம் கடந்த 14 ஆம் தேதி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்து கேட்புக்காக அனுப்பப்பட்டது. இதனை ஆய்வு செய்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியமில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.

 அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என இன்று உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், கொரோனா பேரிடர் காலத்திலும் அர்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி, காணொலி காட்சி மூலமாக 42,233 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 இதுபோன்று அர்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்றிய சூழலில் நடிகர் சூர்யாவின் கருத்து நியாயமான விமர்சனமா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளர். மேலும், தனி நபர்கள் தகவல்களை சரி பார்த்த பிறகே பொதுத்தளத்தில் தங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அது தவறான பல கேள்விகளுக்கு இடம் கொடுத்து விடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

 அரசியல் சாசனம் அளித்துள்ள பேச்சு சுதந்திரம் என்பது நியாயமான விமர்சனத்தையும் உள் அடக்கியது தான் என குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், நடிகர் சூர்யாவின் கருத்துக்களை ஆய்வு செய்த போது, பொது விவகாரங்கள் குறித்து தனி நபர் கருத்து தெரிவிக்கும் போது, குறிப்பாக நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் அவர்களின் பணிகளை விமர்சிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 நியாயமான விமர்சனங்களை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்றாலும், கொரோனா காலத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாமல் நடிகர் சூர்யாவின் விமர்சனம் என்பது அவசியமில்லாத ஒன்று எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், அகரம் அறக்கட்டளை மூலமாக நடிகர் சூர்யா ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வருவதையும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: எஸ்.எம்.சுப்ரமணியம்சாஹிசென்னை உயர் நீதிமன்றம்நடிகர் சூர்யாநீட்நீட் தேர்வு
Previous Post

உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று – முதலமைச்சர் பெருமிதம்

Next Post

பி.பி.ஓ. திட்டத்தில் திருச்சி, மதுரை போன்ற நகரங்களை மையப்படுத்தவேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

Related Posts

நீட் தேர்வால் பாதிப்பே! –   அறிக்கை அளித்தது ஏ.கே.ராஜன் குழு
TopNews

நீட் தேர்வால் பாதிப்பே! – அறிக்கை அளித்தது ஏ.கே.ராஜன் குழு

July 15, 2021
மாணவர்களை ஏமாற்றுவதை நிறுத்துவாரா ஸ்டாலின்?
TopNews

மாணவர்களை ஏமாற்றுவதை நிறுத்துவாரா ஸ்டாலின்?

July 15, 2021
நீட் தேர்வில் கபட நாடகம் – மாணவர்கள் வாழ்க்கையில் ஏன் விளையாடுகிறது திமுக?
TopNews

நீட் தேர்வில் கபட நாடகம் – மாணவர்கள் வாழ்க்கையில் ஏன் விளையாடுகிறது திமுக?

July 14, 2021
நீட் தேர்வு – எதிர்கட்சித்தலைவர் கேள்வி
TopNews

நீட் தேர்வு – எதிர்கட்சித்தலைவர் கேள்வி

June 27, 2021
நீட் தேர்வை ஏற்க முடியாது – தமிழக அரசு திட்டவட்டம்!
TopNews

நீட் தேர்வை ஏற்க முடியாது – தமிழக அரசு திட்டவட்டம்!

April 10, 2021
நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!
TopNews

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

October 16, 2020
Next Post
பி.பி.ஓ. திட்டத்தில் திருச்சி, மதுரை போன்ற நகரங்களை மையப்படுத்தவேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

பி.பி.ஓ. திட்டத்தில் திருச்சி, மதுரை போன்ற நகரங்களை மையப்படுத்தவேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

Discussion about this post

அண்மை செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்!

February 7, 2023
இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

February 7, 2023
உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!

February 7, 2023
களைகட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் – அதிமுகவிற்கு பெருகும் பொதுமக்கள் ஆதரவு!

களைகட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் – அதிமுகவிற்கு பெருகும் பொதுமக்கள் ஆதரவு!

February 7, 2023
வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

February 7, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version