பாகிஸ்தான் சிறைகளில் 537 இந்தியர்கள் உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை தகவல்

பாகிஸ்தான் சிறைகளில் 537 இந்தியர்கள் உள்ளதாக இருநாட்டு ஒப்பந்த அடிப்படையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் சிறைகளில் உள்ள கைதிகள் விவரங்களை ஆண்டுதோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1ஆம் தேதிகளில் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று 2008ஆம் ஆண்டு தூதரக அளவில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதனடிப்படையில், பாகிஸ்தான் சிறைகளில் 54 பொதுமக்கள், 483 மீனவர்கள் என 537 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை, இந்திய தூதரிடம் ஒப்படைத்துள்ளது. இதேபோல், இந்திய வெளியுறவுத் துறையும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம், அந்நாட்டு கைதிகள் விவரத்தை அளித்துள்ளது.

Exit mobile version