9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய காவல்துறையினர் தீவிரம்

நெல்லையில் 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய விவகாரத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவரை, போக்சோ சட்டத்தில் கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் இட்டாமொழியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவிக்கு, தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வம் பாலியல் தொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், நெல்லை மாணவி கர்ப்பமான நிலையில், அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் வள்ளியூர் நீதிமன்றத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version