மின் இணைப்பு வழங்கக் கோரி காலில் விழுந்த பெண்-அலட்சியமாக பதிலளித்த அமைச்சர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கல் அருகே, தமது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க கோரி காலில் விழுந்த பெண்ணை திமுக அமைச்சர் அலட்சியபடுத்திய சம்பவம் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

ஐயப்பன்தாங்கல் அருகே தனலட்சுமி நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில், ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துக்கொண்டார். அப்போது, பெரியகொளத்துவான் சேரி, ராஜகணபதி நகரை சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெண், தமது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சரின் காலில் விழுந்து கதறி அழுதார். இதற்கு ஆறுதல் கூறாமல், அந்த பெண்ணிடம் அமைச்சர் அலட்சியமாக பதிலளித்தார். இதனை செய்தியாளர்கள் வீடியோ எடுக்க விடாமல் அமைச்சரின் உதவியாளர் தடுத்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version