கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி

விருதுநகர் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனைக் கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக் காதலன் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சத்ரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு தர்ஷினி, ரூபாஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், முத்துலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடையே தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ராஜாவுக்கு தெரியவந்ததும், மனைவியைக் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு, கணவர் ராஜாவை காணவில்லை என, காரியாபட்டி காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கொள்ளை வழக்கு ஒன்றில், முத்துலட்சுமியின் கள்ளக்காதலன் மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில், ஜாமீனில் வெளிவந்த மணிகண்டனை, காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அப்போது, முத்துலட்சுமியுடன், மணிகண்டன் மீண்டும் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில், முத்துலட்சுமி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து, ராஜாவை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, முத்துலட்சுமி, மணிகண்டன் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Exit mobile version