இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவர் மீது ஏறிய லாரி: சிசிடிவி காட்சி

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தவர் மீது லாரி ஏறிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

கடலூரை சேர்ந்த முருகன் என்பவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் தூக்கனாம்பாக்கம் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். குருவிநத்தம் தூக்குபாலத்தின் அருகே, சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த லாரி முருகனின் தலை மீது ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து விபத்து நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில், வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அதனைக்கொண்டு காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version