மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் சம்மதிக்காது -அமைச்சர் தங்கமணி

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் சம்மதிக்காது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் மின் ஆய்வுத்துறை சார்பாக எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு விழா சென்னையில் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, மின்சார சேமிப்பை கடைபிடிப்பதன் மூலம் அனல் மின்நிலையங்கள் போன்றவற்றால் ஏற்படும் மாசை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியும் என கூறினார்.

மின்சார தேவை கடந்த ஆண்டுகளை விட தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது என்றார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் மின்கம்பங்களை மின்சாரத்துறை ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு சீரமைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version