சாலை ஒப்பந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சாலை ஒப்பந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட விதிமுறை மீறப்பட்டதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ளதால், தமிழக காவல்துறை விசாரிப்பது முறையாக இருக்காது என கூறி, சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பிலும், முதலமைச்சர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இன்று இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சி.பி.ஐ விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டது.

ஒப்பந்த விவகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டால், ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன் என்றும், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனிடையே, இந்த வழக்கில் முறையான விசாரணை நடைபெற்றுள்ளதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு புகார் அளிக்கப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version