கஜா புயல் பாதிப்பால் மக்காச்சோள பயிரில் குருத்துப்பூச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கஜா புயல் பாதிப்பால் மக்காச்சோள பயிரில் குருத்துப்பூச்சி தாக்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பெரியகுளம் அருகேயுள்ள சில்வார்பட்டி கிராமத்தில், நெல், கரும்பு, வாழை, சோளம் மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், கஜா புயல் காரணமாக அங்கு தொடர் மழை பெய்ததால், மக்காச்சோளம் பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதல் தொடங்கி உள்ளது.

பல்வேறு மருந்துகளை பயன்படுத்தியும் பூச்சி தாக்குதலில் எந்தவித மாற்றமும் இல்லாததால் பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version