பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் கோவை வருகை

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் ரயில் மூலம் கோவை வந்தனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 18-ல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனிடையே, வேட்பு மனுத்தாக்கல் வரும் 19-ஆம் தேதி துவங்கி, வரும் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கான பாதுகாப்புப் பணிகளுக்காக, உத்திரபிரதேசமாநிலம் கோராக்பூரிலிருந்து 168 துணைராணுவப் படையினர் கோவைக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. மேலும் வரும் 30ஆம் தேதிக்கு மேல் கூடுதலான, துணை ராணுவப்படையினர் வருகை தரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version