மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பன் கொலை

மனைவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த நண்பனை மது அருந்த வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கணபதி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது வீட்டில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் இளைஞரின் உடலை கைப்பற்றி, 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். இதில், கொலை செய்யப்பட்டது ராஜா என்பதும், அவர் கார்த்திக்கின் நண்பன் என்பதும் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக கார்த்திக் மற்றும் வினோத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், மனைவிக்கு ராஜா, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், ஆத்திரமடைந்த கார்த்திக் நண்பர் வினோத்குமாருடன் சேர்ந்து  ராஜாவை கொலை செய்தது தெரியவந்தது.

Exit mobile version