உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகம் விரைவில் உருவாக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழக அரசு உத்தரவின் பேரில் சித்தோடு ஆவின் கூட்டுறவு சங்க தேர்தல் சிறப்பாக நடக்கும் என தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் நலன் கருதி ஆவின் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறுகிறது என தெரிவித்த அவர், போரூரில் முதற்கட்டமாக பயோமெட்ரிக் சிம்கார்டு அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

படிப்படியாக தமிழகம் முழுவதும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்த திட்டத்தால் மாணவர்களின் நடவடிக்கை உறுதி செய்யப்படும் என கூறினார்.

Exit mobile version