தொடர் மழையால் கேஆர்பி அணையின் நீர்மட்டம் உயர்வு

தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து 960 கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வடது மற்றும் இடது புற கால்வாய்கள் வழியாக 159 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது. 52 அடி உயரம் கொண்ட கே ஆர் பி அணையின் நீர்மட்டம் 41 புள்ளி 20 அடியை எட்டி உள்ளது. இதே நிலை நீடித்தால் விரைவில் அணை அதன் முழு கொள்ளவை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version