குடிக்க தண்ணீர் கூட இல்லை சார் !

மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட குள்ளவீரன்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிக்குள்ளாகினர். நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Exit mobile version