பானுப்பிரியா வீட்டில் கொள்ளை போன சம்பவம் : பணிபெண்ணின் தாயாரை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று விசாரணை

நடிகை பானுப்பிரியாவின் வீட்டில் நகை திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பணிபெண்ணின் தாயாரை 7 நாள் காவலில் எடுத்த பாண்டிபஜார் போலீசார், அவரை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தனது வீட்டில் பணிபுரிந்த சிறுமியும் அவரது தாயாரும் சேர்ந்து வீட்டில் இருந்த நகைகளை திருடியதாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில், நடிகை பானுப்பிரியா புகாரளித்தார். இதையடுத்து சிறுமியின் தாயார் பிரபாவதி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஆந்திராவில் உள்ள பிரபாவதி வீட்டில் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இந்தநிலையில்,சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபாவதியை 7 நாள் காவலில் எடுத்துள்ள பாண்டிபஜார் போலீசார், அவரை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றனர்.

Exit mobile version