காவலர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் : டி.ஜி.பி உத்தரவு

இருசக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் என்று, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், இருசக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்குவதால், அவர்களும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

தலைக்கவசம் அணிந்து பொதுமக்களுக்கு காவலர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள அவர், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைக்கவசம் அணியாமல் செல்லும் காவலர் விபத்தில் சிக்கினால், அவருக்கான பொறுப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version