தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தாத்தாவை, அடித்து கொலை செய்த பேரன்

தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தாத்தாவை, அடித்து கொலை செய்த பேரனின் செயல் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் தவலிங்க செல்வராயர்.

அதே பகுதியில் இருக்கும் கோயில்களுக்கு தர்மகர்த்தாவாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவரையும் நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

கடந்த 8- ம் தேதி இரவு வெகுநேரமாகியும், தவலிங்கம் வீட்டிற்கு வராததால் பதறிபோன அவரது மகன்கள் இரவு முழுவதும் தேடியுள்ளனர்.

மறுநாள் காலை தரிசு நிலத்தில், தலை மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் அவர் சடலமாக கிடப்பதை கண்ட கிராமத்தினர், கருவேப்பிலங்குறிச்சி போலீசாருக்கும் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்,

10 நாட்கள் ஆகியும் குற்றவாளியை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்ட போலீசாருக்கு, தவலிங்கத்தின் செல்போன் அழைப்புகள் மூலம் துப்பு கிடைத்தது.

அதில் தவலிங்கம் இறப்பதற்கு முன்பு இறுதியாக, தனது பேரனான ரஞ்சித் குமாருக்கு போன் செய்திருப்பது தெரியவந்தது. அதனை வைத்து தவலிங்கத்தின் பேரனை பிடித்து விசாரணை நடத்தியத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தாத்தா தவலிங்கம், தனது தாயுடன் கள்ளத்தொடர்பில் இருப்பது பேரன் ரஞ்சித்குமாருக்கு தெரியவந்தது.

தாத்தாவே தனது தாயுடன் தொடர்பில் இருப்பதை பொறுத்துகொள்ள முடியாத ரஞ்சித் தவலிங்கத்தை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி, தாத்தாவை செல்போன் மூலம் அழைத்து, அடித்தே கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் எதுவும் தெரியாதது போல், மறுநாள் காலை தாத்தா இறந்து கிடப்பதை கூட்டத்தோடு கூட்டமாக நின்று கண்ணீர் விடுவது போல் நடித்து உறவினர்களை நம்ப வைத்துள்ளார்.

இந்த நிலையில் கொலை செய்த ரஞ்சித் குமாரையும் அவருக்கு உடைந்தையாக இருந்த அவருடைய நண்பர் செல்வகுமாரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version