தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அரசாணை வெளியிடப்படும்:கடம்பூர் ராஜு

தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

புதிய தமிழக கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், காமராஜ், ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்கக்கூடிய வகையில், தமிழக அரசு குழு அமைத்துள்ளதாக கூறினார்.

Exit mobile version