அதிமுக-பா.ஜ.க. இடையே ஏற்பட்டுள்ளது சலசலப்பு மட்டுமே..அது கூட்டணியை பாதிக்காது – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு!

அதிமுக-பா.ஜ.க. இடையே ஏற்பட்டுள்ளது சலசலப்பு மட்டுமே என்றும் அது கூட்டணியை பாதிக்காது என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ பாஜக உடனான கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்றார்.kadambur raju

அதிமுக பா.ஜ.க. இடையே தற்போது ஏற்பட்டுள்ளது சலசலப்பு மட்டுமே, இது கூட்டணியை பாதிக்காது என்றும் அப்போது கூறினார். மோடியின் ஆட்சியில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது என்று கூறிய கடம்பூர் ராஜூ, இதுவரை மோடியை தவிர யாரும் பிரதமர் வேட்பாளருக்கான களத்தில் கூட இல்லை என்றார். அடுத்த தேர்தலிலும் பா.ஜ.கவுடன் கூட்டணி தொடரும் என்று கூறிய அவர், மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்று கூறும் முதல்வர் ஸ்டாலின் இதுவரை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் யார் பிரதமர் என்பதை தெளிவுபடுத்தாமல் இருக்கிறார் என்றும் கண்டித்தார்.

 

Exit mobile version