கோடீஸ்வரர் வீடுகளில் வேலைக்குச் சேர்ந்து கொள்ளையடித்த பெண்

கோடீஸ்வரர் வீடுகளில் வேலைக்குச் சேர்ந்து அவர்கள் வீட்டிலிருந்து கொள்ளை அடித்து பல ஆண்களை திருமணம் செய்து, உல்லாசமாக இருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் செயின் மற்றும் இரண்டு கம்மல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் மனோகர் தலைமையில் பெரியமேடு காவல்துறை மற்றும் துணை ஆணையரின் தனிப்பிரிவு காவல் துறையைச் சேர்ந்தவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சென்னை சேத்துப்பட்டு பகுதியில் வீட்டு வேலை செய்யக் கூடிய பெண் வீட்டில் இருந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது அம்பலமானது…

அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளை அடித்த பெண்ணை பெரியமேடு காவல்துறையின் உதவியோடு கைது செய்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேவி என்ற அந்த பெண் கார்த்தி என்பவருடன் முதல் திருமணம் செய்து கொண்டு அவரை கைவிட்டு ஜாஃபர் என்ற அப்துல் மஜீத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார். அவரையும் கைவிட்டு தற்போது மூன்றாவதாக வேலு என்ற ஆட்டோ ஓட்டுனரை திருமணம் செய்துகொண்டு இதுபோன்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறார்…

திருமணங்கள் செய்து கொண்டு உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் பிரபல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் தேவி மீது 2016ஆம் ஆண்டு பெரியமேடு பகுதியில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக, பல பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், தற்போது சேத்துப்பட்டு பகுதியில் செயின் மற்றும் இரண்டு கம்மல் பணம் கொள்ளையடிக் கப்பட்டது தொடர்பாக இவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version