கஜா பாதித்த பகுதிகளை பார்வையிட்ட வனத்துறை அமைச்சர்

இந்தியாவிலேயே மிகவும் மோசமான பாதிப்புகள் தமிழகத்தில் தான் ஏற்பட்டுள்ள என மத்திய குழு தெரிவித்ததாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

கொடைக்கானலில் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் திண்டுக்கல் சினிவாசன் பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திண்டுக்கல் மாவட்டத்தில் சேத மதிப்பு மொத்தம் 250 கோடி ரூபாய் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசு அனுப்பிய குழு ஆய்வு செய்ததில், இந்தியாவிலேயே மிகவும் மோசமான பாதிப்புகள் தமிழகத்தில் தான் ஏற்பட்டதாக கூறியதாகவும், விரைவில் மத்திய அரசு தேவையான நிவாரணத்தை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

 

Exit mobile version