திம்பம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் விதிக்க வனத்துறை முடிவு

சத்தியமங்கலம் திம்பம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக்கட்டணம் விதிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதை வழியாக தமிழகம் – கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகனப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அடர்ந்த வனங்கள் சூழ்ந்து காணப்படும் இப்பகுதியில் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டதால், அப்பகுதி வழியே செல்லும் வாகனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இப்பகுதி வழியே செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் விதிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்ததும் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Exit mobile version