18வது நாளாக தொடரும் ஆட்கொல்லி புலியைத் தேடும் பணி

நீலகிரியில், ஆட்கொல்லி புலியை கண்டுபிடிக்க பொக்காபுரம் மற்றும் மாயாறு வனப்பகுதியில் தேடும் பணியை வனத்துறையினர் விரிவுபடுத்தியுள்ளனர்.

18வது நாளாக, ஆட்கொல்லி புலியை கண்டுபிடிக்க பொக்காபுரம் மற்றும் மாயார் பகுதிகளில் வனத்துறையினர் தேடும் பணியை விரிவுபடுத்தியுள்ளனர்.

சுமார் 65 க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்ட தானியங்கி கேமராக்களில் புலியின் நடமாட்டம் குறித்து பதிவாகததால், நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version