விவசாயிகள் சங்கத்தினர் முதலமைச்சரை சந்திக்க முடிவு

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

விவசாய பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் விவாசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நவம்பர் 29, 30 ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழகத்தில் இருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அய்யாக்கண்ணு, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திக்க உள்ள கூறினார்.

 

Exit mobile version