திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி

திமுக – மதிமுக இடையே இன்றும் கூட்டணி உடன்பாடு ஏற்படாததால், இழுபறி நீடித்து வருகிறது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியுடன் சேர்த்து, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதே போல் இன்று மதிமுக உடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து நாளை பேச்சுவார்த்தை நடைபெறும் என வைகோ தெரிவித்துள்ளார். இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்து வருவதாகவும், அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version