நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை

திமுக தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால், கடந்த 27ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை மற்றும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பால் தற்போது கருணாநிதியின் உடல்நலம் சீராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத்துணைத் தலைவர், தமிழக ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் பற்றி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தனர். இந்தநிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை மறுநாள் சென்னை வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லும் குடியரசுத் தலைவர், அங்கு, கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க உள்ளார்.

Exit mobile version