தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 7 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நாகப்பட்டினம், திருவள்ளூர், மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 5 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திரபாலாஜி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version