சாலை விபத்துகளைத் தடுக்க ‘உயிர்’ எனும் அமைப்பு துவக்கம் – முதலமைச்சர் பங்கேற்பு

சாலை விபத்துகளைக் குறைக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் துவங்கப்பட்ட உயிர் எனும் அமைப்பை கோவை கொடிசியா வளாகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில், கோவையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உயிர் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் துவக்க விழா, கோவை – அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.

இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, உயிர் அமைப்பை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் வேலுமணி, சி.பி.ஐ.முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version