TNSMART செயலியை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் பழனிசாமி!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மக்கள் நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதேபோல், டெல்லி தமிழ் சங்கம் சார்பில் கட்டப்பட்டுள்ள பள்ளியை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அதேபோல், ஒரு கோடியோ 34 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள ப.சிவந்தி ஆதித்தியநார் மணிமண்ட அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது. இதையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கானொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.இதேபோன்று, பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மக்கள் நலத்திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

Exit mobile version