வந்தவாசி அருகே அரசு பள்ளி புதிய கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே அரசு பள்ளிக்கு 1 கோடியே 69 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முலலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணோலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கடம்பை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.ஆபத்தான நிலையில் இயங்கி வந்த பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என மாணவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு 1 கோடியே 69 லட்சம் செலவில் நூலகம், ஆய்வகம், கணினி அறைகள் கொண்ட புதிய கட்டடத்தை கட்டியது. இந்த நிலையில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணோலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். புதிய கட்டடம் அமைத்து தந்த தமிழக அரசுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version