ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார்.

ரங்கநாதர் கோயிலுக்கு சென்ற முதலமைச்சருக்கு, மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதை ஏற்றுக் கொண்ட அவர், கோயில் யானை ஆண்டாளுக்கு பழங்களை வழங்கி ஆசி பெற்றார்.

அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அமைச்சர்கள் தங்கமணி, வெல்லமண்டி நடராஜன், சேவூர் ராமச்சந்திரன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Exit mobile version