இளைஞர்கள் நலனில் அக்கறையில்லா விடியா அரசின் முதல்வர்: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விமர்சனம் !

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாள் விழாவையொட்டி, ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல நல்ல திட்டங்களை விடியா ஆட்சி வேண்டுமென்றே முடிக்கி வருவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைபொருட்களால் வாழ்க்கையை இழந்து வரும் இளைஞர்கள் குறித்த அக்கறை, விடியா அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு துளியும் இல்லை என வேதனை தெரிவித்தார்.

Exit mobile version