நாட்டின் பாதுகாப்பிலும் மத்திய அரசு மிகுந்த அக்கரை காட்டுகிறது…

வளர்ச்சி பணிகளில் அக்கரை காட்டும் மத்திய அரசு, நாட்டின் பாதுகாப்பிலும் மிகுந்த அக்கரை காட்டுவதாக முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் 40,000 கோடி மதிப்பிலான சாலை, ரயில் திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று முதலமைச்சர் உரையாற்றினார்.

கன்னியாகுமரியின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்த அவர், வளர்ச்சி பணிகளில் அக்கரை காட்டும் மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பிலும் மிகுந்த அக்கரை காட்டுவதாக கூறினார். தமிழ்நாட்டை சேர்ந்த விமானப்படை கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தானிடமிருந்து பத்திரமாக மீட்டதற்கு மத்திய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இயற்கை பேரிடர் காலங்களில் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமான கன்னியாகுமரியில், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட புதிய ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். தமிழக அரசு என்றென்றும் மத்திய அரசுக்கு பக்கபலமாக நிற்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

Exit mobile version