சொத்துக்காக அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சொத்து தகராறு காரணமாக அண்ணனை, தம்பி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி கிராமத்தை சேர்ந்த சுப்பரமணி என்பவர் பொதுப்பணி துறையில் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி பச்சையம்மாள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சுப்பரமணிக்கும் அவரது தம்பி சிகாமணிக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இருவருக்கும் ஏற்பட்ட மோதலில், சிகாமணி அரிவாளால் வெட்டியதில், சுப்பரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிகாமணி காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றிய காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version