இரண்டாயிரம் ரூபாய் செல்லாதுய்யா! ஆளவிடுய்யா! Tasmac-ஐ அலறவிட்ட மதுப்பிரியர்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மதுப்பிரியர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுத்த டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். செங்கம் அடுத்த புதுப்பட்டு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் இங்கு வந்த மதுப்பிரியர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து மதுபானம் வாங்க முயன்றுள்ளார். அப்போது டாஸ்மாக் ஊழியர் அதனை வாங்க மறுக்கவே, மதுப்பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மதுப்பிரியரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

Exit mobile version