கொழுந்தனை கொன்ற அண்ணியார்..! கள்ளக்காதலை கண்டித்ததால் ஏற்பட்ட விபரீதம்….!

ராமநாதபுரத்தில், முன்னாள் கள்ளக் காதலனான கொழுந்தனை, இந்நாள் கள்ளக் காதலனோடு சேர்ந்து தீர்த்துக் கட்டி விட்டு, ஒன்றும் தெரியாத அப்பாவி போல் நாடகமாடிய அண்ணி, போலீஸ் விசாரணையில் வசமாக சிக்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ராஜேந்திரனின் சகோதரர் வெளிநாட்டில் வேலை செய்ய, அவர் மனைவி சத்யா மற்றும் அவரின் 2 மகன்களும், ராஜேந்திரனின் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால், பல விதங்களில் அண்ணிக்கு உதவியாக இருந்து வந்துள்ளார் ராஜேந்திரன். இதனால், இருவருக்குள்ளும் ஏற்பட்ட நெருக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கண்ணுக்குக் கண்ணாக கட்டிய மனைவி வீட்டில் இருக்க, அண்ணியாருடன் சேர்ந்து ஆனந்த தாண்டவம் ஆடியுள்ளார் ராஜேந்திரன்.

விஷயம் வெளிச்சத்திற்கு வர, ஊர் சிரித்துப் போனது அவர்களின் பிழைப்பு. இதனால் மனம் மாறிய ராஜேந்திரன், அண்ணி சத்யாவுடன் இருந்த உறவை துண்டித்துக் கொண்டு, அவரை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். உறவிழந்த அந்த உல்லாசப் பறவை, வேறு வழியின்றி, ஊரில் உள்ள சிலரின் உறவை நாடத் தொடங்கியது. இதனை, முன்னாள் கள்ளக் காதலனான கொழுந்தன் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால், சத்யாவிற்கும், ராஜேந்திரனுக்கும் அடிக்கடி முட்டிக் கொண்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சத்யா “ தானும் படுக்க மாட்டேன்; தள்ளியும் படுக்க மாட்டேன்னா எப்படி வாழ்வது” என்று ஆவேசம் பொங்க கொழுந்தனிடம் உரிமைக்குரல் எழுப்பியுள்ளார். ஆனால் ராஜேந்திரனோ, வெளியுறவுகளை கைவிட வில்லை எனில், வண்டவாளத்தை பிளைட் ஏற்றி வெளி நாட்டில் உள்ள அண்ணனிடம் கொண்டு சேர்ப்பேன் என்று அண்ணியாரிடம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

முதலுக்கே மோசம் வந்து விடும் போல என்று எண்ணிய சத்யா, ராஜேந்திரனை உயிருடன் விட்டு வைப்பது தனது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்ற எண்ணத்திற்கு வந்தார். தனது இரு ஆண் நண்பர்களின் துணையோடு அவரை தீர்த்துக் கட்ட திட்டம் வகுத்தார். அதன் படி, ராஜேந்திரனை ஆசையாக பேசி ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று, தனது இன்னாள் கள்ளக் காதலர்கள் இருவரை ஏவி வெட்டிப் படுகொலை செய்தார்.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வர, யாரோ இருவர் தனது கொழுந்தனாரை வெட்டிக் கொலை செய்து விட்டதாக கூறி நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். ஆனால், இதே போல் ஆயிரம் திரைக்கதையை ஏற்கனவே கேட்டுள்ள போலீசார், சத்யாவிற்கு தங்கள் பாணியில் சிறப்பு வகுப்பு எடுக்க, தான் திட்டுமிட்டு ராஜேந்திரனை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

முதலில் தன்னுடன் கள்ள உறவாடிய கொழுந்தனை உயிர் சங்கீதா போல ஆட்கொண்டிருந்த அண்ணி சத்யா, பின்னாளில் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்து, கள்ளக்காதலனுடனேயே இணைந்து கொழுந்தனை கொலை செய்த சம்பவம், திருப்புல்லாணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக, ராமநாதபுரத்திலிருந்து, பா.லிங்கேஸ்வரன்.

Exit mobile version