தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சிறுவன் அடித்துக் கொலை?

கோவையில் தகாத உறவு காரணமாக சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாக கணவனைப்பிரிந்து வாடகை வீட்டில் வசித்து வந்தார். அருக்கும் தேனியை சேர்ந்த ராஜதுரை என்பவரருக்கும் பழக்கம் ஏற்பட்டதால் இருவரும் ஒரே வீட்டில் இருந்துள்ளனர். அந்தப் பெண்ணின் 6 வயது மகன், இதற்கு இடையூறாக இருந்ததால், அவனை பிரம்பால் அடித்து அவர்கள் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சிறுவனுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு மயக்கமடைந்ததால், மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அங்குவந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிறுவனை பரிசோதனை செய்தபோது, அவன் ஏற்கெனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலைவழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிறுவனின் தாய் மற்றும் ராஜதுரை ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version